இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்ற வேண்டும்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் தெரிவிப்பு

us_ass_sec.pngமோதல் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை சாத்தியமான அளவு விரைவில் மீளக் குடியேற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். இவ் விடயம் தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கரிசனை காட்டுகின்றது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் சனத்தொகை, அகதிகள் மற்றும் குடிவரவு தொடர்பான உதவி இராஜாங்க செயலாளர் எரிக் ஷ்வர்ட்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை வெகுவிரைவில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்முடன் கலந்துரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வெகுவிரைவில் குறிப்பிடத்தக்க அளவு மக்களை மீள்குடியேற்றுவதாகவும் அவர்கள் எம்மிடம் உறுதியளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *