ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் வெலிஓயாவில் மீள்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

basil-raja.jpgவெலிஓயா (மணலாறு) பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 இற்கு முன்னர் பூர்த்தியடையுமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கிணங்க கல்யாணிபுர, மொரவேவ, கஜபாபுர கிராமங்களிலுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர். இந்தப் பகுதிக்கான வீதிக்கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு பதவியா பிரதேச சபைக்கு 5 கோடி ரூபா வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இந்தக் கிராமங்களிலுள்ள வீதிகள் கமநெகும திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

வெலிஓயாப் பகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் , நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படும்.  மீள்குடியேற்றம் தொடர்பாக வெலிஓயாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விபரங்களை பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு முழுமையான ஆதரவை இராணுவத்தின் பொறியியல் பிரிவு வழங்கியுள்ளது. கனகபுர, கஜபாபுர, அதாவெ துணுவௌ கிராமங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது. அதாவெதுணுவௌ? நெடுங்கேணி வீதியை நிர்மாணித்துத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *