மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவர் மீதான வழக்குத் தீர்ப்பு வெள்ளிக் கிழமை – குற்றவாளியானால் 5 வருட சிறைத்தண்டனை

miyanmar_s.pngமியன் மாரின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சாங் சுகீ மீதான வழக்கு விசாரணை தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதி தாயுங் நியுந்த் இதைத் தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற 64 வயதான மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவரான ஆங் சாங் சுகீ வீட்டுக் காவலை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கர் ஒருவர் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக் காவலில் இருப்பவர்கள்,  வெளிநாட்டவர்களைச் சந்திக்கக் கூடாது என்பது விதியாகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆங் சாங் சுகீ 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்  என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாக இருந்த போதிலும் முன்னதாகவே தீர்ப்பு வெளியாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை என்று ஆங் சாங் சுகீ யின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங் சாங் சுகீ-யைச் சந்தித்த அமெரிக்கர் ஜான் டபிள்யூ யெட்டாவுக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. குடியேற்ற விதிகளை மீறியது மற்றும் நீச்சல் குளம் இல்லாத பகுதியில் குளித்தது உள்ளிட்ட குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன

கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார் ஆங் சாங் சுகீ

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *