கிழக்கில் அதிஉஷ்ணம்: தென்மேல் பருவ பெயர்ச்சியே காரணம்

கிழக்கு மாகாணத்தில் உஷ்ணம் அதிகரித்திருப்பதற்குத் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலையே காரணம் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டிஹேவா நேற்றுத் தெரிவித்தார்.

திருமலையில் 36.5 சதவீதம், பொத்துவில் 35.1 சதவீதம், மட்டக்களப்பு 33 சதவீதம், அநுராதபுரம் 34 சதவீதம் என்றபடி நேற்று முன்தினம் உஷ்ணம் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

என்றாலும், இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் கடந்த மார்ச், மாதம் குருநாகல் மாவட்டத்திலேயே அதிக உஷ்ணம் பதிவாகி இருப்பதாகவும், அதுவும் 38.1 சதவீதமாக இருந்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கால நிலையாகும்.

அதனால் காற்று தென்மேற்காக வீசுகின்றது. இதன் விளைவாகத் தான் கிழக்கு மாகாணத்தில் தற்போது உஷ்ணம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேநேரம், இவ்வருடத்தில் ஜனவரி மாதம் இந்நாட்டில் மிகவும் குறைந்த உஷ்ண நிலை நுவரெலியாவில் காணப்பட்டது. அது 2.1 சதவீத மாகப் பதிவானது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *