மீள் குடியேற்றத்திற்கு உதவுவதாக பஹ்ரேய்ன் உறுதி

kalifa-shik-binsalman.jpgஇலங் கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பஹ்ரேய்ன் பிரதமர் கலீபா பின் ஷல்மான் அலி கலீபா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் மூன்று முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வடக்கில் இடம்பெயர்ந்தோரின் புனர் வாழவு மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண ஒத்துழைப்பை தமது அரசாங்கம் வழங்குமென பஹ்ரேய்ன் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய பஹ்ரேய்ன் பிரதமர், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் இது சிறந்த முன்னுதாரணமாக அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலக்கை நோக்கிய திடமான பயணத்தில் கொண்டிருந்த கொள்கையும் துணிச்சலுமே அரசாங்கம் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்த அவர், இத்தகைய சந்திப்புகள் இருநாடுகளுக்கிடை யில் நிலவும் நல்லுறவை பலப்படுத்தவும் அதன் மூலம் நாடுகளுக்கிடையிலான வர் த்தக, பொருளாதார நடவடிக் கைகளை மேம்படுத்தவும் உதவுமென தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, பஹ்ரேய்ன் நாட் டில் தொழில் புரியும் 25,000 இலங்கை யருக்கு அவ்வரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளுக்காக நன்றி தெரிவித்தார். அத்துடன் வடக்கில் அரசாங்கம் மேற்கொள் ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பஹ்ரேய்ன் அரசாங்கம் வழங்கி வரும் நிதி மற் றும் ஏனைய ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி இத்தருணமானது முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் பஹ் ரேய்ன் முதலீட்டாளர்களுக்கும் இதற்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் பஹ்ரேனு க்குமிடையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளின் தலைவர்கள் முன்னி லையில் இவ்வொப்பந்தங்கள் கைச்சாத் திடப்பட்டன. இலங்கை மற்றும் பஹ்ரேய்ன் நாடுகளு க்கிடையிலான ஒத்துழைப்புக்கான ஒப்பந் தத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லா கமவும் பஹ்ரேய்ன் சார்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் செய்க் மொகமட் பின் முபாரக் அல் காலிபாவும் கைச்சாத்திட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளா தார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்து ழைப்புகளுக்கான ஒப்பந்தத்திலும் இவர்கள் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடை யிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் பஹ்ரேய்ன் கலாசார மற்றும் தகவல் தொடர்பான அமைச்சுக்கிடையில் கைச்சா த்தாகின. இவ்வொப்பந்தத்தில் இலங்கை யின் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்கவும், பஹ்ரேயின் சார் பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் செய்க் மொகமட் பின் முபாரக் அல் காலிபாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, பிரதி அமைச்சர் ஹ¤சேன் பைலா ஆகி யோரும் கலந்துகொண்டனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *