பேராதனை பல்கலைக்கழகத்துக்கு ஆகஸ்ட் முதல் புதிய உபவேந்தர்

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தராக பொறியியற் பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.பீ. அபயகோன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி பழைய மாணவரான எஸ்.பீ.அபயகோன் உபவேந்தர் பதவிக்கான தேர்தலில் 15 வாக்குகளை பெற்றிருந்தார் இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன 9 வாக்குகளே பெற்றிருந்தார்.

ஆகஸ்ட் 1ம் திகதி முதல் புதிய உபவேந்தர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார். இவர் சார்க் பல்கலைக்கழக குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *