பேருவளை மோதல் சம்பவம்; 131 சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்; ஓகஸ்ட் 6ம் திகதி வரை விளக்கமறியல்

beruwela.jpgபேருவளை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதான 131 சந்தேக நபர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக கைதான மற்றும் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபர்கள் நேற்று (29) களுத்துறை நீதவான் நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன் போதே 131 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் சம்பவத்துடன் தொடர்புடை யதாகக் கூறப்படும் ஏனைய பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

பேருவளை மஹகொட பகுதியில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோதலில் மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசல் தாக்கப்பட்டதோடு இருவர் கொல் லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் கடந்த 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதோடு இவர்கள் நேற்று வரை (29) விளக்கமறிய லில் வைக்கப்பட்டி ருந்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிக ளான சிரில் பெரேரா, கனிஷ்க ஆகியோர் ஆஜரானதோடு மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக சட்டத்தரணி பிரேமரத்ன ஆஜரானார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் புஹாரி தக்கியா பிரதான சேகிற்கும் தொடர்பிருப் பதாக ‘பி’ அறிக்கை மூலமும் சாட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளதாகவும், எனவே பிரதான சந்தேக நபர்களை கைதுசெய்யுமா றும் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், பொலி ஸார் விசாரணைகளை வேறு பக்கம் திருப்ப முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சந்தேக நபர்கள் சார்பாக ஆஜ ரான சட்டத்தரணி சிரில் பெரேரா இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு சம்பவ நேரம் இரவு 12.30 மணியளவில் பிரதான சேக் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் இருந்ததாகவும் சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறினார். பொலிஸாரும் இதே கருத்தையே நீதிமன் றத்தில் முன்வைத்தனர்.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்குப் பணித்தார். வழக்கு விசாரணையை பார்வையிட பெருந்திரளான மக்கள் நீதிமன்ற வளாகத் திற்கு வருகை தந்திருந்ததோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, தாக்கப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று (29) இடம்பெற்றன. பள்ளி வாசலில் சிந்தியிருந்த இரத்தக் கறைகள் கழுவப்பட்டதோடு தீ வைக்கப்பட்ட இடங் களும் சுத்தப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப் படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *