வவுனியாவில் கிராமம் கிராமமாக வீதிப் பிரச்சாரத்தில் ஈடுபடும் புளொட் அமைப்பினர்

வவுனியா நகரசபைக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளில் புளொட் அமைப்பினரும், ஆதரவாளர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) நங்கூரம் சின்னத்தில் தனித்துவமாக போட்டியிடுகின்றது. முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் இதில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஜனநாயக மக்கள் முன்னணி முன்னர் வவுனியா நகரசபையைப் பொறுப்பேற்றிருந்த போது மேற்கொண்ட பணிகளும், சாதனைகளும் ஏராளம் என்பதை மக்களுக்கு ஞாபகமூட்டும் வகையிலும்இ இனி மேற்கொள்ளப் போகும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியே இந்தப் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வீடுவீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரப் பணிகளை புளொட் அமைப்பு மக்களோடு மக்களாக இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *