உள்ளூர் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க வங்கிகளின் உயரதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தொழிலை காத்திரமானதாக முன்னெடுத்துச் செல்ல இது பெரிதும் உதவுமெனவும் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். தற்போது லங்கா புத்ர வங்கியின் மூலம் சில பகுதிகளில் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களைப் பெறக்கூடியதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கைத்தொழில் துறைகளை மீள்கட்டியெழுப்பும் வகையில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.