இவ் வருடத்தின் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெற்றோர் சாதகமான சுழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறும், பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாது வினாப்பத்திரத்திற்கு அவர்கள் சுயமாக விடையளிப்பதற்கு தயார் செய்யுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 லட்சம் மாணர்கள் தோற்றவுள்ளனர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.