இலங்கை மீனவர்கள் ஐவரும் விடுதலை

இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததன் காரணமாக கைதாகி தமிழ் நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தெவிநுவரவுக்கு திரும்பி வந்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று கூறியது.

கடந்த ஏப்ரல் மாதம் தெவிநுவர மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து இவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு நடுக்கடலில் வைத்து விபத்துக்குள்ளானதால் இவர்கள் 22 நாட்கள் கடலில் தத்தளித்துள்ளதோடு பங்களாதேஷ் கடற்படையினர் இவர்களை மீட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகு பங்களாதேஷில் வைத்து திருத்தப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தியக் கடலுக்குள் நுழைந்தபோது இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீன்பிடித் திணைக்களத்தின் தலையீட்டையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *