லிபியப் புரட்சியின் 40 ஆவது வருட நினைவு வைபவங்களில் கலந்துகொள்வதற்காக லிபியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பினார். லிபியாவின் தலைவர் முஅம்மர் கடாபியின் விசேட அழைப்பின்பேரில் அங்கு சென்ற ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் இடம்பெற்ற படையினரின் அணிவகுப்பில் இலங்கைப் படை வீரர்களும் பங்கு கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னரே லிபியாவுடனான உறவுகள் பலமடைந்தன. லிபியாவுடன் நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களே விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட சுமார் 40 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.