முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய 4 பெயர்களில் நடமாடிய புலி உறுப்பினர் நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் கைது

முக்கியஸ் தர்களை இலக்கு வைத்து அவர்களை கொலை செய்வதற்காக நான்கு பெயர்களில் நடமாடிய புலி இயக்க முக்கிய உறுப்பினர் ஒருவரை புலிகளின் அடையாள இலக்க விபரங்களுடன் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி கெட்டம்புலா தோட்ட பிரதேசத்தில் விறகு மடுவமொன்றுக்குள் ஒழிந்திருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, நீர்கொழும்பு மட்டக்குழி போன்ற இடங்களில் தற்காலிகமாக வசித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. பெனடி சுஜான், கொலம்பஸ், டரிகுமார் மற்றும் கே. வை. என நான்கு பெயர்களில் இவர் நடமாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *