இராக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர் நால்வர் பலி

இராக்கின் பல இடங்களில் இடம் பெற்றுள்ள பல சாலையோர தொடர் குண்டு வெடிப்புகளில், நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் எட்டு இராக்கிய போலீசார் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் வடபகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது துருப்பினர் நாட்டு வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான போது மூவரும், தெற்கு பாக்தாதில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவரும் பலியாகியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது

இதே போன்று வட இராக்கில் இடம் பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் அந்த நகரின் போலீஸ் தலைவரும் அவரது மூன்று சகாக்களும் பலியாகியயுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு கிர்குக் நகருக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தவும், அதிகாரத்தை கைப்பற்றவும் இராக்கிய குருதுகள், அரபுகள் மற்றும் துர்குமான்கள் ஆகியோர்கள் போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *