தொழிலாளருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம்

080909teawomen.jpg“நாம் எமது தொழிலாளர்களின் நிலையை நன்கு அறிந்தவர்கள். அதனால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம். எமது சமூகத்தைப் பற்றி நன்கு சிந்தித்துத்தான் கூட்டு ஒப்பந்தத்தை செய்யவிருக்கிறோம்.

அடிப்படைச் சம்பளமாக 285/= ரூபாவையும், மேலதிகக் கொழுந்து கிலோவிற்கு 9/= ரூபாவிலிருந்து 12/= ரூபாவாகவும் உயர்த்தியுள்ளோம். அதே நேரத்தில் வரவு நாட்களுக்கு 75% சதவீதம் என்ற நிலையை மாற்றி வேலை நாளுக்கு 405/= ரூபாய் என்ற நிலையில்தான் ஒப்பந்தம் செய்யவிருக்கி ன்றோம்”. இவ்வாறு இ.தொ.க பொதுச் செயலரும் இளைஞர் வலுவூட்டல் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

டிக்கோயா தரவறைத் தோட்டத்தில் நட ந்த கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

ஏப்ரல் மாதம் தொடங்கி புதிய முறை யில் சம்பளம் கணக்கிடப்படும். பாக்கிச் சம்பளத்தை தீபாவளிக்கும், கிறிஸ்மஸ் திருநாளுக்கும், தைப் பொங்கலுக்குமாக பிரித்து கொடுக்கப்படும். அரை நாள் சம்ப ளம் என்று இனிமேல் கணக்கிடப்படமாட்டாது. நாம் மக்களுக்கு தெளிவுப்படுத்தவே இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சந்தித்து வருகிறோம்.

வேலை நாட்களில் குறிப்பிட்ட 75% சத வீதம் என்று சம்பளம் கணக்கிடப்படமாட் டாது. அதேநேரத்தில் வைத்தியத்திற்கு மருத்துவமனையில் மூன்று நாட்களிருந்தால், அதனையும் வேலை நாளாக கணிக்கப்படும். குறிப்பாக முன்னர் வழங்கிய தேயிலை கொழுந்துக்கு மூன்று ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆறு மாதம் சரியாக வேலை செய்தால் 7வது மாதம் சுகவீனம் என்றதால் அதனையும் வேலை நாட்களாக கணிக்கப்பட வேண்டும். இதேநேத்தில் எமது மக்களின் நன்மைக்காக,  இந்தியா இன்னும் 30 பஸ் வண்டிகளை அனுப்பி வருகின்றது. அத்தோடு எமது தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை களுக்கு தீர்வுகாண வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு இந்திய அரசை கோரியுள்ளோம். ஆகவே, எந்தவித வேலை நிறுத்தமுமின்றி 405/= சம்பள உயர்வை பெற்றுள்ளோம்.

இன்றைய நிலையில் தற்போது இ.தொ.கா ஒப்பந்தத்தை செய்யவிருக்கின்றது. உற்பத் தித் துறையிலும் நாம் அநுசரித்தாக வேண் டும். இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 405/= ரூபாயாக அமுலுக்கு வரும் பாக்கிச் சம்பளத்தில் 50% வீதம் திரு நாட்களில் மூன்று தவணையாகப் பிரித்து கொடுக்கப்படும். எமது மக்கள் தீபாவளி, கிறிஸ்மஸ், தைப்பொங்கல் என்ற வகையில் அந்த பாக்கிச் சம்பளம் வழங்கப்படுமென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *