மஸ்கெலிய யுவதிகளின் தாயாரை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு

கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரு யுவதிகளின் தாயாரை கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் அஜர்செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ஆயிஷா ஆப்தீன், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இதற்கான உத்தரவை விடுத்துள்ளார். ஒக்டோபர் 29ம் திகதிக்கு முன் தாயாரை ஆஜர் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவைச் சேர்ந்த இரு தமிழ் யுவதிகள், கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள கால்வாயொன்றினுள் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் வீடொன்றில் பணியாளர்களாகப் பணியாற்றினர். பணிபுரிந்த வீட்டுக்காரரால் இரு யுவதிகளும் துன்புறுத்தப்பட்டனரா என்பது பற்றி நீதிமன்றம் மேற்படி தாயாரிடம் விசாரணைகளை நடத்தும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *