இஸ்ரேலிய – பாலத்தீன தலைவர்களை ஒபாமா கூட்டாக சந்திக்கிறார்

210909_flatboyafp.jpgமத்திய கிழக்கு சமரச பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கமாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு மற்றும் பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் கூட்டு சந்திப்பு ஒன்றை செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார்.

நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டம் நடக்கும் போது இந்தச் சந்திப்பும் நடக்கும். உடனடியாக இந்த விடயத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என்பது தொடர்பில் அனைத்து தரப்பும் நம்பிக்கையற்றே இருக்கின்றன.

இஸ்ரேலுக்கு அதிபர் அப்பாஸ் அவர்கள் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்துவிடக் கூடாது என்று போட்டி பாலத்தீனக் குழுவான ஹமாஸ் எச்சரித்துள்ளது. அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான ஜோர்ஜ் மிட்சேல் அவர்கள் மத்திய கிழக்குக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பகிரங்கமான முன்னேற்றங்கள் எதுவும் தெரியாததை அடுத்து, தற்போது இந்தச் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *