மன்னார் அபிவிருத்தி குறித்து அமைச்சர் தலைமையில் நேற்று கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை 10.00 மணியளவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் வீதி, மின்சாரம், விவசாயம், உட்கட்டமைப்பு போன்ற வேலைத்திட்டங்களை மீள் குடியேற்ற அமைச்சுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பாக மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசி, உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தர்.

கலந்துரையாடலை அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். எம். முனவ்பர் ஏற்பாடு செய்திருந்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *