இந்தியாவின் பிரதி பாதுகாப்பு ஆலோசகராக அலோக் பிரசாத்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் இந்தியாவின் பிரதி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நியமனத்தின் ஊடாக இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் பிரதான பொறுப்பதிகாரியாகவும் இவர் பதவியேற்கவுள்ளார். இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் தொடர்ச்சியாக கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு பதவிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதி ஆலோசகர் பதவிகள் முக்கியமானவை என சுட்டிக்காட்டப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *