மலையகத்தில் அடைமழை – மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய கட்டட ஆய்வு நிறுவனம்

011009rain-in-upcountry.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மத்திய மாகாணத்தில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன்கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதியில் ஆங்காங்கே சிறியளவான மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரதேச பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *