புலமை பரிசில் பரீட்சையில் ஹம்பாந்தோட்டை முதலிடத்தில்

021009-dep-of-edu.jpgஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று நண்பகல் 12:00 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தூர இடங்களில் உள்ள பாடசாலைகள் கல்வியமைச்சின் http://www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின்படி ஹம்பந்தோட்டை ரு{ஹணு விஜயபா மகா வித்தியாலய மாணவர் ஜே.ஏ.பிரமோத் டில்ஷான் 196 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *