தெல்தோட்டை மினி சூறாவளியில் 25 குடும்பங்கள் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgதெல் தோட்டை, பட்டிகாமம் தோட்டப் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 3 லயன்களிலுள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லயன்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டதுடன் வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பட்டிகாமம் மலைமகள் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கு மாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். பிரதேச செயலர்பால கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *