தொண்டர் ஆசிரியர்களாக இருந்து ஆசிரியர் உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ள ப்பட்டவர்களின் மாதாந்த கொடுப்பனவை 3000 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆலோசித்து வருவதாக கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்தார்.
ஆசிரிய உதவியாளர்களாக இருக்கும் இவர்கள் தொடர்ந்தும் 5 வருடங்களுக்குள் ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொண்டோ, அதற்குரிய பட்டப் படிப்பை பூர்த்தி செய்வது என்ற நிபந்தனையின் பேரிலேயே தொண்டர் ஆசிரியர்களாக இருந்த இவர்களை ஆசிரிய உதவியாளர்களாக கல்வி அமைச்சு இணைத்துக்கொண்டது.
அதனால் இவர்கள் கட்டாயமாக இந்த நிபந்தைனயை நிறைவேற்ற வேண் டும் என கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்தார்.