அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் றதுகல காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் மரணமடைந்தும், நச்சுக் கிழங்குகளை உண்டதனால் சிலர் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்பாறை- பிபிலை பிரதான வீதியில் சுமார் 15 மைல் தொலைவில் றதுகல என்ற காட்டுப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு சுமார் 50 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றன. சுது வன்னிலத்தோ என்பவர் அக்குடும்பங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
அண்மைக் காலமாக மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி றதுகலவையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் உண்பதற்காக பராமரித்து வந்த சிறுசேனைகள் நீரின்றி வரண்டுவிட்டன. அதனால் அவர்கள் வேறு பல காட்டு மரங்களின் கனிகளையும், காய்களையும் சில கிழங்கு வகைகளையும் புசித்துவந்தனராம். கடந்தவாரம் இவ்விதம் உண்ட கிழங்கில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இரு ஆதிவாசிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.