சீனாவும், இந்தியாவும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தாவிட்டால் இரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகளின உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உயர்நிலைக்கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 2050-ம் ஆண்டில் உலக நாடுகளின் உணவுத் தேவைக் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளிளும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப்; பொருட்;களின் தேவையும் அதிகரிக்கிறது.
2050-ம் ஆண்டில் இரு நாடுகளும் அதிகமான உணவுப்; பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டியதிருக்கும். இதற்காக இரு நாடுகளும் விவசாயத் துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியதிருக்கும். இதற்கு இரு நாடுகளும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவசாயத் துறை முதலீட்டை அதிகரிக்க இரு நாடுகளும் தற்போதிருந்தே முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாய துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது அவசியம். இது உள்நாட்டு அளவில் மட்டுமல்லாது வெளிநாட்டு அளவிலும் இருக்க வேண்டும்.
விவசாயத் துறையில் முதலீட்டுக்குத் தடையாக உள்ள காரணிகளைக் களைந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் எளிமையாக முதலீடு செய்யும் வகையில் சாதகமான சு10ழலை உருவாக்குவது அவசியம்.
இதுதவிர்த்து, சீனா, இந்தியா இரு நாடுகளுமே உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களின் பலன் அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது முக்கியமானதாகும்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பாதுகாப்பாகச் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்குகளை அமைத்தல், விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தலிலும் இரு நாட்டு அரசுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.