வன்னி முகாம்களின் கதவுகள் திறக்கப்பட்டால் உதவிகள் தேடிவரும்

வன்னி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதனால் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதில் தயக்கம்காட்டுவதாக ஐ நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதவி வழங்கும் அமைப்புகள் உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆனால் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அவர்களை எரிச்சலடைய வைப்பதாகவும் ஐ நாவில் வதிபவரும் இலங்கைக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவருமான நெயில் புனே தெரிவித்தார்.

ஒக்ரோபர் 9 புள்ளிவிபரங்களின்படி 245 000 பேர் இன்னமும் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு இருந்தது. ஆனால் ஒக்ரோபர் 22ல் 41 000 பேரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் குடியமர்த்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

கடந்த யூலையில் இடம்பெயர்ந்த அகதிகளின் 185 திட்டங்களுக்கு 270 மில்லியன் டொலர்கள் தேவைப்பட்டதாக குறிப்பிடும் நெயில் புனே அரசு 155 மில்லியன் டொலர்களுக்கான வழியை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார். முகாம்கள் திறந்தவிடப்பட்டால் பெருமளவிலான உதவி செய்யும் அமைப்புகள் உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *