ஆப்கன் ஜனாதிபதியாக மீண்டும் கர்ஸாய் வெற்றி

031109karzai.pngஆப்கானிஸ் தானின் ஜனாதிபதியாக இரண்டாம் முறையாக ஹமீது கர்ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர் திங்கள்கிழமை முறைப்படி அறிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஹமீது கர்ஸாய் பெரும்பான்மை வாக்குகள் பெற்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் பதிவானதாகவும் தேர்தலில் தில்லு முல்லு செய்தே கர்ஸாய் வெற்றி பெற்றதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் அப்துல்லா அப்துல்லா குற்றஞ்சாட்டினார்;.

இதையடுத்து,  ஐநா தலையிட்டு அந்த தேர்தலை ரத்து செய்து அடுத்த கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்தது. அதில் கர்ஸாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவர் மட்டுமே போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் தில்லு முல்லு நடக்கும், வாக்குப்பதிவு நேர்மையாக நடக்காது என்று குற்றம்சாட்டி போட்டியிலிருந்து விலகினார் அப்துல்லா.

கர்ஸாய் மட்டுமே களத்தில் இருந்தார். இதனால், இரண்டாம் கட்ட தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கர்ஸாயை ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, அதிபர் தேர்தலில் கர்ஸாய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையாளர்; அஜிஸல்லா லூதின் அறிவிப்பு வெளியிட்டார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *