அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற 3174 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவிக்கிறது.
தற்போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 3175 அழகியற் கல்வி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கத்துடனேயே கல்வி அமைச்சு மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளது.
சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம் போன்ற அழகியற் கல்வித் துறைக்கு மேற்படி 3174 பட்டதாரிகளும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதன்படி தேசியப் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளும் பட்டதாரிகள் கல்வி அமைச்சினூடாகவும், மாகாண பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சினூடாகவும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் படியே வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்படும்.
அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இவ்வாறு புதிய ஆசிரியர் நியமனங்கள் நிரப்பப்படுவதற்கு முன்ன தாக பாடசாலைகளில் நிலவும் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பாக விபரங்கள் பெறப்பட்டு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் சமநிலை பேணவும் கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.