சு.க. தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெ றும். பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்ப மாகும் இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கொள்கை அறிக்கை வெளியிடப்படுவதோடு, தேர்த ல்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்படுமென சு. க வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதிலுமிருந்து சு.க. கிளைகளின் பிரதிநிதிகள் சு.க அமைப்பாளர்கள், ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள், பங்குபற்றுவார்கள்.

சு.க.வின் அழைப்பையேற்று பிரிட்டிஷ் கன்சர்வேட்டிக் கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு பற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்களெனத் தெரியவருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • karuna
    karuna

    புலிகள் கொன்சவேட்டிவ் கட்சிக்க காசு கொடுத்து எங்களுக்காக கதைக்கச் சொல்லி அனுப்பியுள்ளார்கள்.

    Reply