அவுஸ் திரேலியாவின் சுங்கப்பிரிவுக் கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து 36 பேர் 5 படகுகளில் நேற்று புதன்கிழமை காலை ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தோனேசியாவின் பின்ரன் தீவிலுள்ள தஞ்ஜுன் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்படவிருப்பதாக ஏ.ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்தது.
இதற்கு முன்னர் இந்தோனேசியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான டாக்டர் சுஜாத்மைக்கோ தலைமையிலான அதிகாரிகள் குழு கப்பலுக்கு சென்று புகலிடம் கோருவோர் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்டது. கப்பலிலிருந்த இலங்கையரின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆலோசனைகள் என்பன பரிசீலிக்கப்பட்டன. கப்பலிலிருந்து புகலிடம் கோருவோர் யாவரும் இறங்கிச் சென்றவுடன் ஓசனிக் வைக்கிங் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்லவுள்ளது.
அகதிகளென்பது நிரூபிக்கப்பட்டால் சில மாதங்களில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவர் என்ற உறுதிமொழியை புகலிடம் கோரும் இலங்கையர் இப்போது ஏற்றுக்கொண்டதையடுத்து இந்தோனேசியாவின் தடுப்பு நிலையத்துக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.