கொழும்பில் குடாநாட்டு மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பு அனுமதியை கேட்கும் பொலிஸார்

யாழ்.குடாநாட்டிலிருந்து ஏ9 வீதியூடாகக் கொழும்புக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அனுமதி நீக்கப்பட்டபோதும் அவர்கள் கொழும்பில் தங்குவதற்கு அந்த பாதுகாப்பு அனுமதித்துண்டை பொலிஸார் கேட்கின்றனர். இதுவரை காலமும் கொழும்பு வருபவர்கள் தமது பாதுகாப்பு அனுமதித்துண்டை (கிளியறன்ஸ்) பொலிஸ் நிலையங்களில் காண்பித்து வதிவிட பொலிஸ் பதிவை மேற்கொண்டனர்.

தற்போது அந்த பாதுகாப்பு அனுமதித்துண்டை கொழும்பில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் கேட்பதாக அங்கிருந்து வருவோர் கூறுகின்றனர். பாதுகாப்பு அனுமதி நீக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதியைக் காண்பித்து தற்போது குடாநாட்டு மக்கள் பயணம் மேற்கொள்ளும் முறையை பொலிஸ் நிலையங்களில் கூறினால் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

அத்துடன், இங்குள்ள சில கிராம சேவையாளர்கள் பொலிஸ் பதிவை உறுதிப்படுத்த யாழ்ப்பாணத்தில் உள்ள கிராம சேவையாளரின் கடிதத்தையும் கேட்கின்றனர். இவ்வாறான நிபந்தனைகளால் குடாநாட்டு மக்கள் கொழும்பில் தங்குவதற்கு பொலிஸ் பதிவை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடாநாட்டிலிருந்து வருபவர்கள் கொழும்பில் தங்குவதற்கு பொலிஸ் பதிவை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *