சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட நான்கு படகுகள் தென் பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

சட்டவிரோத ஆட்கடத்தலில் 100 க்கு மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற நான்கு மீன் பிடி படகுகளை இலங்கை கடற்படை யினர் தென் பகுதி ஆழ்கடலில் கைப்பற்றிய துடன் அதில் இருந்தவர்களை காலிக்கு கொண்டு வந்து தடுப்புக்காவலில் வைத்து ள்ளனர். இந்த நான்கு படகுகளில் இரண்டு நேற்றும் (23) இரண்டு படகுகள் இன்றும் (24) கடற் படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு விமானப் படையினரும் பொலிஸாரும் கடற்படைக்கு உதவியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட சமயம் இந்த படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா செல்வதற்காக படகில் இருந்தவர்கள் பெருந்தொகை பணத்தை இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் ஈடுபட்டவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் இவர்களில் தமிழர்களுடன் சிங்களவர்களும் இருப்பதாக கூறிய கடற்படை பேச்சாளர் இவர்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கடற்படையினர் உதவி வருவதாக குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *