நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் சிறுபான்மை சமூகங்களுக்கு நன்மை இல்லை

sampanthan.jpg1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பும் அதனூடாக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே ஆபத்தையும், அழிவையும் ஏற்படுத்தி விட்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டில் சாதாரண நீதி கூட நடைமுறைச் சாத்தியமாக்கப்படவில்லை எனவும் இன்று காணப்படுவது குழம்பிப்போனதொரு அரசியல் கலாசாரமே எனவும் சுட்டிக்காட்டினார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் நினைவையொட்டி ஜனநாயக தலைமைத்துவ நிறுவனமும், பிரட்ரிக் நோமன் மன்றமும் இணைந்து கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள பூக்கர் ரெட்ஸ் மண்டபத்தில் நடத்திய பகிரங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மை சமூகங்கள் மீதான அதன் தாக்கம் எனும் தொனிப் பொருளில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சம்பந்தன் கூறியதாவது;நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையால் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் பாதிப்படையவில்லை. சிங்கள மக்களும் கூட பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்கின்றனர்.

இந்த 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் பிதாமகனாக ஜே.ஆர்.ஜயவர்தன காணப்படுகிறார். அதனூடாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அதிகார முறையின் பேராபத்தை உணர்ந்து அன்றைய அரசியலிலிருந்த லலித் அத்துலத் முதலி கூட பிற்பட்ட காலத்தில் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நிறைவேற்று அதிகாரம் இன்று சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *