ஐ.தே.க.வின் சுயரூபம் அம்பலம்: அமைச்சர் யாப்பா கண்டனம்

anura.jpgஐ.தே.க. மாநாட்டில் நேற்று ஊடகவி யலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலின், மூலம் ஐ.தே.க.வின் ஊடக சுதந்திரம் தொடர்பான நிர்வாணம் மீண்டும் முழு உலகிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாடு நடந்த போதும் ஏனைய அனைத்து சந்திப்புகளின் போதும் தாம் விரும்பியவாறு செய்திகளை வெளியிடுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்நாட்டில் ஊடக சுதந்திரமில்லையெ னக் கூறி ஐ.தே.க. தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிரசாரம் இன்று அவர்களிடமே சுற்றி வந்துள்ளதோடு, உண்மையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் யார் என்பது நேற்றைய தாக்குதல் மூலம் தெரியவந்து ள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு ள்ளார்.

ஜனநாயகம் பற்றிப் பெரிதாகப் பேசும் ஐ.தே.க. தமது மாநாட்டு வளாகத்திலேயே ஊடகவியலாளர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதையும் அவர்கள் உபகரணங்களை சேதப்படுத்தி யதையும் ஜனநாயகத்தை விரும்பும் எவரும் விரும்பமாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் பிரசார ஆரம்பத்தின் போது வன்மமாகவும், மிலேச்சத்தனமாகவும் செயற்பட்டு ஐ.தே.க. மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தேர்தலில் ஈடுபட முயல்கிறார்கள் என்பது புலனாகின்றது. இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் குரல் எழுப்ப வேண்டுமெனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *