ஐ.நா.வின் விசேட தூதுவர் முன்னாள் சிறுவர் போராளிகளை சந்தித்தார்

சிறுவர் களுக்கான ஐ.நா. வின் விசேட தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மெயார்ட் முன்னாள் சிறுவர் போராளிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்ததுடன், அரசாங்க அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புலிகளினால் பலவந்தமாக படைக்குச் சேர்க்கப்பட்டிருந்த சுமார் 300 சிறுவர்களை கம்மெயார்ட் சந்தித்ததாக ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் கூறினார். மட்டக்களப்புக்குச் செல்லவுள்ள கம்மெயார்ட் அதன் பின்னர் வவுனியாவுக்குச் சென்று அங்கு தொழில்பயிற்சி பெற்றுவரும் சிறுவர்களை பார்வையிடவுள்ளார். சுமார் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா இரட்ணாயக்கா ஏ.எவ்.பி.செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *