‘ரணில் யாழ்ப்பாணம் சென்றுவர வழி ஏற்படுத்தியவர் ஜனாதிபதி’

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ள முடியாமலிருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணம் சென்று வர வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

மாத்தறை சென். தோமஸ் கல்லூரியில் திங்களன்று நடந்த நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் கூட அவரால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய முடியவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *