காலநிலை சீர்கேடால் சுரங்கப்பாதை ரயில் சேவைகள் இடை நிறுத்தம் – லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய பயணிகள் அவதி

காலநிலை சீர்கேடு காரணமாக சுரங்கப்பாதையினூடான ரெயில் சேவைகள் சீர்குலைந்தன. இதனால் சுமார் இரண்டாயிரம் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. குறித்த நேரத்துக்கு தங்கள் இடங்களைச் சென்றடைய முடியாது போனதால் ரெயில் நிலையங்களில் இரவைக் கழிக்க நேர்ந்தது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இடங்களுக்கான சுரங்கப்பாதை ரெயில் சேவை கடும் குளிர் காரணமாக சென்ற சனிக்கிழமை சீர்குலைந்தன.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து ரெயில்கள் இயங்க முடியாத நிலைக்கு வந்தன. இதனால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நகரங்களுக்கான சுரங்கப் பாதை ரெயில் சேவைகள் சீர்குலைந்தன.

பயணிகள் இரவை ரெயில் நிலையங்களில் தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கழிக்க வேண்டியேற்பட்டது. சில இடங்களில் ஆங்கில ஒளிபரப்புகள் இடம்பெறவில்லையென பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலமாகையால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய ரெயில் சேவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கடும் குளிரான கால நிலையால் ரெயில் சேவைகள் சில ரத்துச் செய்யப்பட்டன.

பிரதான சேவையில் ஈடுபட்ட ரெயில்களில் ஐந்து இயங்க முடியாதளவுக்குப் பழுதடைந்தன. இது மாத்திரமன்றி விமான சேவைகளும் மோசமான பனிப் பொழிவால் தடைப்பட்டன. படகுகள் போக்குவரத்தும் வெள்ளிக்கிழமை தடைப்பட்டன.

தற்போது ரெயில், விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நஷ்டஈடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *