உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங் களில் முடிவுறுவதற்காகவுள்ள உள் ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு ள்ளதாக மாகாண சபைகள், உள்ளூ ராட்சி சபைகள் அமைச்சு அறிவித்து ள்ளது.

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள் சிலவற்றின் பதவிக் காலம் 2010 ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் முடிவுறுகிறது. இதன்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் அமைச்சருக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அமைச்சர் ஜனக பண்டார தென்ன கோன் நீடித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *