அமைச்சர் சந்திரசேகரனின் திடீர் மறைவு இந்நாட்டு தமிழர்களுக்கு மாத்திரமன்றி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என மாத்தளை மாநகர முதல்வரும் ஸ்ரீல.சு.கயின் கண்டி – மாத்தளை மாவட்ட அமைப்பாளருமான ஹில்மி முஹம்மது கரீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் சந்திரசேகரன் எனது நீண்டகால நண்பன். இந்நாட்டில் வாழும் தமிழ்மொழி பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகுவதுடன் ஒரு புதிய அரசியல் வரலாறும் எழுதப்படும் என்பதில் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்.
மலையக மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருந்த அவர் மலையகத் தமிழர்களுக்கு மாத்திரமல்லாது நாட்டின் அனைத்துத் தமிழர்களுக்காக வேண்டி பாராளுமன்றத் திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் குரல் கொடுத்த ஒரு சிரேஷ்ட தலைமைத்து வத்தை நாடும் குறிப்பாக மலையக மக்களும் இழந்து விட் டார்கள் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.