கிழக்கில் மாவட்ட கலாசார மத்திய நிலையங்கள்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கலாசார திட்டங்களை அபிவிருத்தி செய்யும் முகமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மாவட்ட கலாசார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற் கட்டமாக அம் பாறை மாவட்ட கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் டீ.டபிள்யூ.யு. வெலிக்கல தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விலமவீர திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல்லை நட்டுவைத்தார். கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதி உதவியில் அம்பாறை மாவட்ட கலாசார நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *