186 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை

fishing.jpgதமிழகம் மற்றும் ஆந்திரா கரையோர பகுதிகளில் கைதான இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஓகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 186 பேரும் சென்னை மற்றும், விசாகபட்டினம் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். கடற்றொழில் அமைச்சர் பீளிக்ஸ் பெரேரா இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக மேற்படி 186 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு ள்ளனர்.

விடுதலையான 186 மீனவர்களும் அவர்கள் பயணம் செய்த 35 ஆழ்கடல் வள்ளங்களுடன் இன்று இலங்கை கடல் எல்லையூடாக அழைத்து வரப்படுகின்றனர். மிரிஸ்ஸ, தெவிநுவர, தங்கல்ல, வென்னப்புவ, திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *