அடுத்த மாத முற்பகுதியில் முதற்கட்டமாக 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம்

நாடு பூராவும் உள்ள பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 615 பேரைப் புதிதாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதற் கட்டமாக அடுத்த மாத முதற்பகுதியில் 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளதாகக் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மட் தம்பி தெரிவித்தார்.

இவர்களுக்கான கடிதங்கள் கல்வி வலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு நேர்முகப் பரீட்சையில் தெரிவான ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு இரண்டாம் கட்டத்தின் போது நியமனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங் களுக்கு ஏற்ப இவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், சிங்களமொழி மூலம் 11 பேருக்கான வெற்றிடம் காணப்படுவதாகக் கூறினார். ஆனால் இந்த வெற்றிடங்களை நிரப்பத் தகுதியானவர்கள் இல்லை எனவும் அறியவருகிறது. மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காக 194 விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். அதிலே முதற்கட்டமாக 99 பேர் தெரிவானதோடு ஏனையவர்கள் அடுத்த கட்டத்தின் போது மெளலவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *