புலிகளுடைய அரசியலில் இருந்து புலிகளற்ற அரசியலை நோக்கி : பேரின்பம் பரமானந்தம்

Paranthaman_Perinpam._._._._._. 

கட்டுரையாளர் பேரின்பம் பரமானந்தம் – பரமன் என அறியப்பட்டவர். திருகோணமலை மாவட்டம் மூதூரைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வதிகின்றார். ‘திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு – பிரித்தானியா’ வின் தலைவராக உள்ளார். இவர் முன்னாள் ஈபிஆர்எல்எப் திருகோணமலை மாவட்ட மக்கள் தொடர்பாளர்.

._._._._._.

இலங்கை சுதந்திரமடைந்து 62 வருடங்களைக் கடந்தும் தமிழர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வந்தார்கள். இதனால் சீற்றமடைந்த தமிழ் மிதவாத தலைவர்கள் சத்தியாக்கிரக வழிகளில் அகிம்சை ரீதியாக இதற்கு எதிராக போராடி வந்தனர். இருந்தும் பேரினவாதம் எந்தவிதமான சம உரிமைகளையும் மறுத்து வந்ததுடன் காலத்துக்குக் காலம் இன வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டது.

இதன் உச்சக் கட்டமாக 1983ம் ஆண்டு, இன அழிப்பின் உச்சக் கட்டத்தை அடைந்தது. விளைவு ஆயுதம் ஏந்திப் போராடுவதன் மூலம் தமிழர்களின் நிம்மதியான வாழ்வை சிங்கள ஏகாதிபத்தியத்திடம் பெற முடியுமென தமிழ் மக்கள் நம்பினார்கள். இதனால் பல ஆயுதக்குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர். புலிகளின் ஏகப்பிரதிநிதித்து வமானது 1986ம் ஆண்டு புலிகள் தவிர்ந்த மற்ற ஆயதக்குழுக்கள் அனைத்ததையும் முற்று முழுதாக தடைசெய்து, கொலை செய்ததன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை நடைபெறும் தமிழர்களின் அழிவை புலிகள் அன்றே தொடக்கிவிட்டனர். ஏககாலத்தில் தங்களுடன் சேர்ந்து போராடிய அனைத்து மிதவாத தலைவர்கள் உட்பட அனைவரும் புலிகளால் கொலை செய்யப்பட்டும், இவ்வளவு தூரம் இந்த மாற்று இயக்கங்கள் புலிகளுக்கு தோல்வியை ஏற்படுத்துவார்கள் என்று புலிகள் அப்போது அறியவில்லை. அந்த அளவுக்கு சகோரத இயக்க கொலை வெறி ஏறியிருந்தது.

இந்த நிலையில் சுயநிர்ணய உரிமை கேட்டுப்போராடிய தமிழ் மக்களுக்கு ஆசியாவின் வல்லரசான இந்தியா ஏற்கனவே பக்கத்து நாடான பாக்கிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளின் பிரச்சினைகள் தீர செயற்பட்ட அதே பாணியில் செயற்பட்டது. இலங்கையில் இந்திய அரசின் நேரடித்தலையீட்டின் இந்தியத்தாய்க்கும் இலங்கை தகப்பனுக்கும் பிறந்த குழந்தையே வடக்கு கிழக்கு மாகாண அரசு. உண்மையில் இது தமிழீழம் அல்ல ஈழஅரசியலுக்கு கிடைத்த அங்கிகாரம் என்பது உண்மையே. புலிகளின் தவறான அல்லது தூர நோக்கற்ற அரசியலால் அதையும் இல்லாது ஒழித்துவிட்டனர்.

அன்று புலிகள் ஏற்றிருந்தால் அல்லது ஏற்றுசெயற்பட்ட ஈபிஆர்எல்எப் இயக்கத்தை விட்டிருந்தால் இன்றுவரை சுமார் இருபது வருடம் கழிந்தும் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் மாகாண அரசுக்கு தராவிட்டிருந்தால் இதையே காரணம் காட்டி சர்வதேச சமூகத்திடம் நீதிகேட்டு நாம் தனியாக பிரிந்து செல்லப் போகிறோம் என்ற ஈழ அங்கீகாரத்தை பெற்றிருக்க முடியும். அதையும் புலிகள் செய்வதற்கு, சுட்டுக்கொலை செய்ய தெரிந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை.

1983 ஆண்டு பிறந்த இலங்கை தமிழ் பிள்ளைக்கு சுமார் இருபது வருடம் பிரபாகரன் காட்டியது யுத்தமும், மாவீரர் துயிலும் தமிழ் இளையவர்களின் கல்லறைகளும் மட்டுமே. புலிகளில் 30ஆயிரம் பேரும் மற்றக் குழுக்களில் 10 ஆயிரம் பேரும் அண்ணளவாக புலிகளால் பலிகளாக்கப்பட்டனர். கிழக்கில் மட்டும் 40 000 தமிழ் இனம் 20க்கும்30க்கும் இடைப்பட்ட வயது விதவைகளையும் வடக்கில் 35 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விதவைகளையும் உருவாக்கியது. இதுவே புலிகளின் போராட்டத்திற்கு தமிழர்கள் பெற்ற தமிழீழமா?. புலி ஒரு கணம் சிந்தித்து அன்று அனைவரும் ஒன்றுபட்டு போராடியிருந்தால் ஏன் இந்த நிலை.

1989ம்ஆண்டு இந்தியப்படை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த நேரம் புலிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவுக்கும் தேன் நிலவு ஆரம்பித்தது. அந்நேரத்திலும் புலிகள் மிகப்பெரியதொரு சகோதர இயக்கப் படுகொலையை செய்திருந்தார்கள். அப்போது புலிகள் துண்டுப்பிரசுரம் ஒன்றை அடித்து வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த வாசகம் ‘இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட அனைத்துமட்ட போராளிகளுக்கும் எமது தலைவர் பிரபாகரன் பொதுமன்னிப்பு தருகிறார். எம்மிடம் சரணடைந்தவர்களை பாதுகாப்பாக நாம் சுதந்திரமாக செல்ல அனுமதிப்போம்’ என்பதே.

இதை நம்பிய மாகாண அரசில் பங்கெடுத்த ஈபிஆரஎல்எப், ஈஎன்டிஎல்எப், ரெலோ இயக்க போராளிகள் இன்று இராணுவத்தின் வசம் உள்ள திருகோணமலை- சம்பூரை நோக்கி வந்து கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு மூதூரை நோக்கி ஓடினார்கள். அப்படி ஓடிய முதலாவது குழுவினரை புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதித்துவிட்டு அதிலும் ஒரு தந்திரம் கடைப்பிடித்தார்கள். இரண்டாம்முறை அதிகமான ஈபிஆர்எல்எப் போராளிகள் ஓடினார்கள். இப்படியாக அனைவரையும் ஒன்று சேர்த்த புலிகள் மூதூரில் உள்ள மறைச்சேனை சித்திவிநாயகர் ஆலய கோயில் முன்றலில் அனைத்து மதபெரியார்கள் முன்னிலையில் கூட்டம் போட்டு இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிட்டதாக கூறி கலைந்து செல்ல உத்தரவு இட்டனர். பின்னர் ஒரு கிழமைக்குப் பிறகு சிறிய ரக லான்மாஸ்டர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டு எமது தலைவர் உங்களுடன் பேச விரும்புகிறார் வாருங்கள் என்று சொல்லி அழைத்துச்சென்று ஈச்சலம் பற்றைக்காடுகளில் சுமார் 1500 மேற்ப்பட்டோரை வரிசையில் நிற்க வைத்து கொலை செய்து விட்டார்கள்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து மாகாண அரசக்கு சேர்க்கப்பட்ட CDF பிரஜைகள் தொண்டர் படையினரை இதே அளவு சுட்டுக்கொன்றது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று எனது குடும்பத்தில் மாத்திரம் புலிகளால் ஆறு பேரும் அரசபடைகளால் ஒருவரும் என ஏழுபேர் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்திக் கொல்லப்பட்டார்கள். சிலர் நேரடியாக வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்ட சிலருக்கு மட்டுமே அக்காலத்தில் மரண அத்தாட்சிப்பத்திரம் பெறக்கூடிய சூழல் இருந்தது. இது இதை உறுதிப்படுத்துவதற்காக இணைக்கப்படுகிறது.

1. முத்துக்குமார் கணேசகுமார். பெரியவெளி மூதூர் – மாமா
2. அல்பேட் ரொன்சன். பொடிமாத்தளை பத்தமுடிச்சேனை மூதூர் – மாமா
3. ஆதிருகட்டிராஜா. மணற்சேனை -மல்லிகைத்தீவு மூதூர் -மாமா
4. நாகலிங்கம் சந்திரன். மணற்சேனை மல்லிகைத்தீவு- மூதூர் – தம்பி
5. விக்டர் சொய்சா முரளீதரன். பெரியவெளி- மூதூர் – மச்சான்
6. முத்துலிங்கம் தங்கவேல். பெரியவெளி மூதூர் -மாமா
7. ஆதிருகட்டி அமரசேன. பெரிய வெளி மூதூர்- (இராணுவம் சுட்டது) – மாமா

இப்படி என் குடும்பத்தினர்போல் பல தமிழ் குடும்பங்கள் அனைத்துப் பகுதிகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்பது உண்மையே. இன்று தமிழர்களுக்கு தேவை குறைந்த பட்சம் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சமாதானத்தீர்வு. அதைத்தான் இன்று சாதாரணமான தமிழ் மக்கள் கையேந்துகிறார்கள். இலங்கை அரசிடம் பேரம்பேசும் அரசியல் சமநிலையை தமிழ் அரசியல் மிகவும் பலவீனமான நிலையில்கேட்க முடியாத தயக்கமான நிலைதான் காணப்படுகிறது. இவை அனைத்தும் புலிகளின் தூரநோக்கற்ற அரசியல், தமிழ் மக்களுக்கு அநீதிகள் என்றால் அது மிகையாகாது.

யானை தன் கையினால் தனக்கு மண்அள்ளிப் போட்டதுபோல் புலிகள் தங்களுக்கு தாங்களே மண் அள்ளி தங்களின் அழிவைத் தேடிக் கொண்டார்கள். மகிந்தாவை ஜனாதிபதி ஆக்கினால் அவர் கடும்போக்காளர் சண்டைக்கு வருவார். நாம் தமிழீழத்தை வென்று விடலாம். ரனில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தால் முழுப்புலிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார் என்று புலிகள் தங்களது பலத்தை மிதமிஞ்சி பீற்றிக் கொண்டது மட்டுமன்றி வடபகுதி தமிழர்களை வாக்களிக்காது தடுத்து பெரிய ஜனநாயக விரோதப் போக்கையும் செய்து, மகிந்தவை ஜனாதிபதியாக்கி இன்று இந்த கடும்தோல்வியைப் பெற்றிருக்கிறார்கள்.

இத்தனை தோல்விகளுக்கும் அடிப்படைக் காரணம் – புலிகளால் உயிர்பறிக்கப்பட்ட சிறந்த ஜனநாயகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் சரோஜினி, சிவபாலன் போன்ற பல மிதவாத தலைவர்கள் உட்பட ஈபிஆர்எல்எப் பத்மநாபா, ரெலோ சிறீசபாரத்தினம் போன்ற ஆயுதக்குழுக்களின் தலைவர்களையும் தங்களது தலைமை வெறிக்கு இரையாக்கினார்கள்.

இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண அரசுக்கு ஈபிஆர்எல்எப் பலாத்காரமாக மாகாண அரசை பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது தமிழ் தேசிய இராணுவம். இதுவும் ரிஎன்ஏ 1990 பிரேமதாஸா அரசு பேச்சுவார்த்தைக்கு வந்த புலிகள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து கிழக்கில் பெரும் இராணுவ தாக்குதலை நடாத்தினார்கள். இதனால் அச்சமடைந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை புலிகள் பகிரங்கமாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்துச் சுட்டுக்கொலை செய்தார்கள்.

உண்மையில் புலிகள் இவர்களை மன்னித்து இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் விரும்பிச் சேரவில்லை. ஈபிஆர்எல்எப் இனால் பிடிக்கப்பட்டவர்கள் என்பதால் அதனை பல தடவை பேட்டிகளின் போது கருணா அம்மான் – இன்றைய தேசிய நல்லிணக்க அமைச்சர் சுட்டிக்காட்டியதும் நினைவுக்கு எடுக்கலாம்.

உண்மையில் புலிகள் மற்ற ஏககால ஆயுதப்போராட்ட இயக்கங்களை தடைசெய்து தாக்குதல் நடாத்தியவேளை கிழக்கில் கட்டுக்கடங்காது தமிழ் இளைஞர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் அந்த அளவுக்கு பெருந்தொகையான தோழர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படவில்லை. அங்கும் நடந்தது தான், ஆனால் ஒப்பீட்டளவில் கிழக்கில் தான் அதிகம். அதற்குக் காரணம் புலிகளின் தலைமை யாழில் இருந்தது. கிழக்கில் அப்படி அல்ல, எல்லாம் முடித்துவிட்டு தொலை தூரக்கருவி மூலம் அறிவிப்பது மட்டும் வழக்கம். அதனால்த்தான் விரும்பியபடி பலரை கொலை செய்தார்கள்.

அநுராதபுர தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் ஆடையின்றிய உடலை மனிதாபிமானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நானும் அதை சரி என்று சொல்லவில்லை. ஆனால் தங்களிடம் சரணடைந்தவர்களை மன்னிப்பு என்று சொல்லி அழைத்துவிட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்திக்குச் சந்தி பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு சிலர் துப்பியும், சிலர் தும்புத்தடிகளால் தாக்கியும் தங்கள் வஞ்சகத்தைத் தீர்த்துக்கொண்ட பின்பு கொலை செய்ப்பட்டார்கள்.

இந்திய இராணுவத்திற்கு தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக என்னுடன் செயற்பட்ட மூதூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஜெகதீசன் குரூஸ். இப்போது அவர் ஒரு கல்விப்பணிப்பாளர் என நினைக்கிறேன். அவரை முட்டுக்காலில் புலிகள் தவழ விட்டு தண்டனை வழங்கினார்கள். இது எந்த நாகரீகம். இதேபோல் மூதூர் மணற்சேனையை சேர்ந்த ஜீவரட்ணம் தங்கரத்தினம் குடும்பத்தில் புலிகள் அவரது 8 குழந்தைகளின் தந்தையான அண்ணண் முத்துக்குமார் அவரது தம்பி அருள் அவரது ஒரே ஒரு மகன் சசிகுமார் 2008ல் புலிகள் கொலை செய்து விட்டு, அவரை அவருடைய ஊருக்கே வரக்கூடாது என்று உத்தரவிட்டு அவர் இப்போது திருகோணமலையிலேயே தஞ்சமடைந்து இருக்கிறார்கள். புலிகளின் நீதித்துறை இதுதானா? இந்த தங்கரத்தினம் உள்ளுராட்சி மன்ற செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று உலகம் முழுவதும் புரட்சிகள் ஜனநாயக வழிக்கு வந்து கொண்டிருக்கையில் தமிழர்கள் மட்டும் கொல்ப்பட்டு வருவது மிகவும் வேதனை அழிக்கிறது.

1983 பிறந்த ஒரு குழந்தை இன்று 26 வயது பெரிய பிள்ளை. அதற்கு கொழும்பு தெரியாது. ரெயின் தெரியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். தமிழீழத்தின் பெயரால் இவர்களுக்குத் தெரிந்தது சண்டையும் உயிர்க்கொலைகளும் செல்தாக்குதல்களும் தான். குறைந்தபட்சம் அவர்களுக்கு ரெயின் பஸ் மட்டுமன்றி கொழும்பு போன்ற இடங்களையாவது பார்ப்பதற்கு குறைந்தபட்ச தீர்வுக்கு தமிழ் தலைமைகள் முன்வருவது காலத்தின் தேவை.

கல்வி கலாச்சாரம் பொருளாதாரம் இனவிருத்தி போன்றவற்றிலும் நிலம் போன்ற அனைத்திலுமே கிட்டத்தட்ட 30 வருடம் நமது சமூகம் மூன்றாம் தரப்பு நிலைக்கு பின்நோக்கி தள்ளிவிடப்பட்டிருக்கிறது. இப்போதாவது தீர்வு ஒன்றை பெறாவிட்டால் நமது சமூகம் – இன்னும் வரலாற்றில் தமிழினம் நம்மை மன்னிக்காது கல்லறைகளை உடைத்தெறிவார்கள், விரைந்து செயற்படுங்கள். எனவே அனைத்து தரப்பும் நியாயமான தீர்வினைப்பெற்று தமிர்கள் நிம்மதியாக வாழ இந்த தருணத்தில் முன்வர வேண்டும்.

குறுகியகால சந்தர்ப்பவாதக் கூட்டுக்களைவிட்டு, பழிவாங்கும் அரசியலைவிட்டு தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அனைவருமே இலங்கையர் என்ற எண்ணத்தக்க ஆட்சியை வழங்கக் கூடியஒரு அரசியல் தலைவருக்கு இலங்கை மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    வாழ்த்துக்கள் பரமன் தோழர். நல்ல பதிவு. உங்களைப்போன்ற எல்லா பாதிக்கப்பட்ட போராளிகளும் தங்களது அனுபவங்களை எழுதினால்தான் புலிகளைப்பற்றிய பிரமைகளும் புனைவுகளும் உடையும்.

    -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    Reply
  • thirumal
    thirumal

    திருகோணமலையில் என கேள்விப்பட்டேன் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் அமைப்பின் ஒருவரை சுட்டது. ஈரோஸ் அமைப்பினர் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும், பின்னர் இரவு ஈரோஸ் இயக்கத்தை அழிக்க என ஈபிஆர்எல்எப் முழு படையணியும் வரும்போதும் ரெலோ தடுத்து நிறுத்தியது. இதில் ரெலோ ஈபிஆர்எல்எப் வாக்குவாதப்பட்டது, பின்னர் ஈபிஆர்எல்எப் கலைந்து போனது. ஈரோஸ் பாதுகாக்கப்பட்டது. கட்டுரையாளர் இந்த சம்பவத்தை முழுவதுமாக விபரித்து எழுதுவீர்களா? இந்தகாலத்தில் இருந்த ஈரோஸ் உறுப்பினர்கள் இன்றும் லண்டனில் இது பற்றி அமைதியாகவே இருக்கிறார்கள்.

    Reply
  • P பரமானந்தம்
    P பரமானந்தம்

    தோழமையுடன் திருமால்
    இந்திய அரசாங்கம் ஈரோஸ் இயக்கத்துக்கு ரென்ட்- கூடாரம் அடிக்கும் படங்குகள் வழங்கியிருந்தது. இது இந்திய இராணுவப் படங்குகள். இந்தப் படங்குகள் திருகோணமலை கும்புறுபிட்டி என்ற இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது இப்படங்குகளால் புலிகள் கூடாரம் அடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோஸ் இயக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட இப்படங்குகள் எப்படி புலிகள் முகாம் அமைக்கக் கொடுத்தவர் யார் அதில்தான் அப்போதைய இந்திய இராணுவம்தான் அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் தவறு ஈபிஆர்எல்எவ் அல்ல.

    தோழருக்கு
    எமது தலைவர் பத்மநாபாவின் வழிகாட்டலில் எமது அமைப்பில் இருந்த இளம் தோழர்களுக்கு கல்விபுகட்டல் திட்டத்தின் கீழ் O/L பரீட்சைக்காக இரவுபகலாக கஸ்டப்பட்டு சில தோழர்கள் படித்தனர். இப்படிப் படித்த தோழர்களை 10 12 1989 அன்று காலை ஏழு மணிக்கு நொக்ஸ் றோட் ழூதூர் 3 எனும் எமது ழூதூர் அலுவலகத்தில் இருந்து கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு பல தோழர்களை நானே அனுப்பியிருந்தேன். இப்படி பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 58ற்கும் முன்னம்பெடிவெட்டைக்கும் இடையில் உள்ள கமநலசேவை திணைக்களத்திற்கு முன்னால் அங்கு பதுங்கியிருந்த புலிகளும் சில ஈரோஸ் தோழர்களும் வண்டியை ஆயுதமுனையில் வழிமறித்தனர். பேரூந்தைச் செலுத்திச்சென்ற மூதூரைச் சேர்ந்த சாரதி திரு பீட்டர் விபரீதத்தை உணர்ந்து வண்டியை நிறுத்தவில்லை. தான் செத்தாலும் பரவாயில்லை அந்த ஈபிஆர்எல்எவ் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அவர் வண்டியை வேகமாக ஓட்டினார்.

    பஸ்ஸின்மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த இக்குழு வண்டியை நிறுத்தி குபு குபுவென ஆயுதங்களுடன் உட்புகுந்ததைக் கண்டு பஸ்ஸிலிருந்த அனைவருமே நடுங்கிக் கொண்டிருக்கையில் பஸ் சீற்றுக்குக் கீழ் பதுங்கிக்கொண்டிருந்த ஈபிஆர்எல்எவ் தோழர்களை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் தோழர்களின் தலைகளைக் கொண்டுவரும்படி அக்கால மூதூர் புலிகளின் தளபதி கண்ணதாசன் உத்தரவிட்டதால் அவர்கள் தலைகளை வெட்டி எடுத்துச் செல்ல நாம் தலைகளற்ற உடல்களையே எடுத்துவந்து அடக்கம் செய்தோம்.

    இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச்சூடு நேரடியாக செவிமடுத்த ஈரோஸ் இயக்க உறுப்பினர் சுதா என்பவர் இன்றும் என்னுடன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

    இதில் கொல்லப்பட்ட தோழர்களுள் ஒருவர் ஈஎன்டிஎல்எவ் தர்மராசா ஆனந்தன் -மறைச்சேனை மூதூர் வயது 18. ஈபிஆர்எல்எவ் சீவரத்தினம் அருள்குமார்- மறைச்சேனை மூதூர் வயது 17. இந்த இருவரினதும் தலைகளை வெட்டி எடுத்துக்கொண்டு மற்றவர்களை புலிகள் பிடித்துச் சென்று விட்டனர்.

    இதே பாணியில் புலிகளிடம் சரணடைந்த விக்டர் சொய்சா முரளீதரன், பாத்திபன் சின்னத்துரை குண்டுவண்டன் யோகன் இன்னும்பலர் இவர்கள் பெரியவெளி மூதூரைச் சேர்ந்தவர்கள். ஒருநாள் மாலை சாதுவாக இருட்டிய நேரம் விசாரணைக்கென இவர்களை பெரியவெளி சவக்காலைக்குள் அழைத்துச்சென்ற புலிகள் இவர்களின் கையாலேயே குழிகளை தோண்டச்சொல்லிப் பணித்தனர். பின் அவர்கள் கைகளை கட்டி கடுமையாகத் தாக்கிவிட்டு அவர்களின் கடைசி ஆசை என்னவெனக் கேட்டார்கள். அதில் ஒருவரான முரளீதரன் எனது மாமாவின் மகன் தான் மனைவியுடன் கொஞ்சநேரம் சந்தோசமாக இருக்க வேண்டும் எனக் கேட்தற்கு அனுமதித்த புலிகள் பின்னர் அவர்கள் கிண்டிய குழிக்குள்ளே கொலைசெய்து புதைத்தார்கள். இது பவன் தலைமையில் இடம்பெற்றது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பரமானந்தம்,
    பல விடயங்களை உங்கள் கட்டுரை வெளிக் கொண்டு வந்துள்ளது. அதற்கு முதலில் நன்றிகள். இப்படியான உண்மைகளை நீங்கள் ஒரு தொடராகத் தர முடிந்தால், பல சந்தேகங்களை நாமும் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

    Reply