தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் பூர்த்தி

election_box.jpgஇன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் பூர்த்தியாகின்றன. தேர்தல் பிரசார அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்டவுட்டுக்களை இன்று நள்ளிரவுடன் அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இறுதி பிரசார கூட்டங்களும் இன்று நடைபெறவுள்ளன.

இன்று காலை 10.00 மணிக்கு தெபரவெவ பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு ஹினிதுமவிலும், மாலை 5.00 மணிக்கு கெஸ்பாவ பகுதியிலும் நடைபெறவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *