”தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும்” – தேர்தல்கள் ஆணையாளர்

election-commisone.jpgஜனாதிபதி தேர்தலுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். மாவட்ட மட்டடங்களில் தேர்தல் அத்தாட்சி அலுவலர்களும் நாடாளாவிய ரீதியில் தனது உதவி ஆணையாளர்களும் தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தகால போரினால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,புத்தளம் கொழும்பு,களுத்துறை,கம்பஹா, குருணாகல்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் எனவும் தயானந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *