மண்டைதீவு இராயப்பர் தேவாலயம் நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பு

images1.jpgயாழ். மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் நேற்று மாலை ஆலய நிர்வாகத்தினரிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட் டது.  அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இதுவரை காலமும் கருதப்பட்ட மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயப்பகுதி வழிபாடுகளுக்காக விசேட அனுமதி பெற்றே அடியார்கள் செல்ல வேண்டியிருந்தது.

இப்பகுதியின் அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவதுடன் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 3.30 மணியளவில் புனித இராயப்பர் தேவாலயம் கையளிக்கப்பட்டதுடன் ஆசிர்வாத பூஜையும் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம் அடிகளாரும் இந்த ஆசிர்வாத பூஜையில் கலந்து கொண்டார். யுத்தம் காரணமாகவும், அண்மையில் குடாநாட்டை ஊடறுத்துச் சென்ற புயல் காற்றினால் சேதமடைந்திருந்த மேற்படி ஆலயத்தின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருடந்தோறும் வரும் ஆனி 29 இல் ஆலய மகோற்ஸவமும் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *