ஊடகவியலாளர் ஈவா ரணவீர காலமானார்!

eva_ranaweera.jpgபிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஈவா ரணவீர இன்று காலமானார். மரணிக்கும்போது இவருக்கு வயது 85.  கம்பஹ புனித சிலுவைக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்ற இவர் ஒரு பட்டதாரியாவார்.

அரச மொழி திணைக்களத்தில் முதல் நியமனம் பெற்ற இவர் லங்கா தீப பத்திரிகையின் வனிதா வித்தி சஞ்சிகையின் ஆசிரியையாக 10 வருட காலம் சேவையாற்றியதுடன் மகளிர் குரல் என்ற பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக 20 வருட காலம் பொதுப்பணியாற்றியுள்ளார்.

இவர் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களை எழுதி விருதுகளும் பெற்றுள்ளார்.

இவரது பூதவுடல் பொரல்ல ஜயரத்ன மலர்ச் சாலையில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் 5:00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *