வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. 22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

கட்சிச் செயலாளர்களும், கட்சிகளால் பிரேரிக்கப்பட்டவர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களும் தவிர வேறு எவரும் மாவட்ட செயலகங்களுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்களென தேர்தல் செயலகம் தெரிவித்தது. கட்சி ஆதரவாளர்கள் கச்சேரிகளுக்கு அருகில் கூடுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் இன்று முதல் (19) – 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளன. பிரதான கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *