வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு.

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன.

இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே தாக்கல் செய்துள்ளன. அதேநேரம் நேற்று நண்பகல் வரை சுமார் 250 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சுமார் 50 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினத்திலேயே நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்கின்றன. இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் யாவும் இன்று முடிவடைந்துள்ளன.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான நண்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை ஒன்றரை மணி நேர கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்படவுள்ளது-

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *