தலிபான்களை ஒழிக்க பாகிஸ்தான் அரசு இலங்கையை பின்பற்ற வேண்டும்! பழங்குடித் தலைவர் செய்யத் அலாம் மசூட் கோரிக்கை

mehsud.jpgபாகிஸ் தானில்  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தலிபான்களை ஒழிக்க இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் பின்பற்றவேண்டும் என பாகிஸ்தான் பழங்குடி மக்களின் தலைவா செய்யத் அலாம் மசூட் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியினரின் முக்கிய பாதுகாப்புக் கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பேஷவாரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பாகிஸ்தானுக்கு உதவி வழங்கும் குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்படும் பிரதேச மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் தலிபான்களின் வலையமைப்புக்களை தகர்த்தெறியும் வகையில் புதிய தாக்குதல்களை நடத்தவேண்டும் எனவும் பழங்குடிகளின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *